Saturday, April 5, 2008

சிரிக்கலாம் வாங்க:

நகைச்சுவை 1:

ஒரு கணினி நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் வேலை செய்யும் மூன்று சாப்ட்வேர் என்ஜினியர்களையும் மூன்று ஹார்ட்வேர் என்ஜினியர்களையும் ஒரு கணினி மாநாட்டிற்காக அனுப்பினர். அவர்கள் அனைவரும் ரயிலில் பயணம் செய்ய முடிவெடுத்தனர். ஹார்ட்வேர் என்ஜினியர்கள் மூன்று டிக்கெட் வாங்கினர் . சாப்ட்வேர் என்ஜினியர்கள் ஒரே ஒரு டிக்கெட் வாங்கினர். இதைக் கவனித்த ஹார்ட்வேர் என்ஜினியர்கள், ரயிலில் டிக்கெட் பரிசோதகர் வருவார் நீங்கள் மாட்டிக்கொள்வீர்கள் என்றனர்.

அவர்கள் கூறியது போலவே டிக்கெட் பரிசோதகர் வந்தார். சாப்ட்வேர் என்ஜினியர்கள் மூன்று பெரும் கழிவறையில் ஒளிந்து கொண்டனர். டிக்கெட் பரிசோதகர் வந்து கதவைத் தட்டி டிக்கெட் கேட்டார். அவர்கள் ஒரு டிக்கெட்டை கதவின் அடி வழியாக கொடுத்தனர். டிக்கெட் பரிசோதகர் டிக்கெட்டை பரிசோதித்து விட்டு திருப்தியாக சென்றார். சாப்ட்வேர் என்ஜினியர்களின் இந்தச் செயல், ஹார்ட்வேர் என்ஜினியர்களைக் கவர்ந்தது.
மாநாடு முடிந்து மீண்டும் ரயிலில் பயணம் செய்வதற்காக ரயில் நிலையத்தை அடைந்தனர். இந்த முறை ஹார்ட்வேர் என்ஜினியர்கள், சாப்ட்வேர் என்ஜினியர்கள் முன்பு செய்தது போல நாம் ஒரே ஒரு டிக்கெட் வாங்கலாம் என்று முடிவெடுத்து ஒரு டிக்கெட் வாங்கினர். ஆனால் இந்த முறை சாப்ட்வேர் என்ஜினியர்கள் டிக்கெட் எதுவும் வாங்கவில்லை. இதைக் கவனித்த ஹார்ட்வேர் என்ஜினியர்கள், ரயிலில் டிக்கெட் பரிசோதகர் வருவார் நீங்கள் மாட்டிக்கொள்வீர்கள் என்றனர்.

அவர்கள் கூறியது போலவே டிக்கெட் பரிசோதகர் வந்தார். இந்த முறை ஹார்ட்வேர் என்ஜினியர்கள் மூன்று பெரும் கழிவறையில் ஒளிந்து கொண்டனர். சாப்ட்வேர் என்ஜினியர்களில் ஒருவர் கழிவறைக்குச் சென்று கதவைத் தட்டி டிக்கெட் கேட்டார். ஹார்ட்வேர் என்ஜினியர்கள் டிக்கெட் பரிசோதகர் தான் டிக்கெட் கேட்கிறார் என்று நினைத்து டிக்கெட்டைக் கொடுத்தனர். சாப்ட்வேர் என்ஜினியர்கள் மூன்று பெரும் அடுத்தக் களிவறைக்குச் சென்று ஒளிந்து கொண்டனர்.

No comments: