Monday, April 30, 2012

அழகுக்குறிப்பு

* நரையைப் போக்க மருதாணி இலையைப் பறித்து சுத்தம் செய்து மைய அரைத்து இரவு படுக்கப் போகும் முன் தேய்த்து சிறிது காய்ந்ததும் படுத்துவிடலாம். மறுநாள் காலை எழுந்து குளித்தால் முடி சிறிது நிறம் மாறி இருக்கும். இம்மாதிரி தொடர்ந்து செய்து வர நரை போய் விடும்.

* மருதாணி இலையைச் சுத்தம் செய்து மைய அரைத்து சிறுசிறு உருண்டைகளாக உருட்டி வெயிலில் உலர வைத்தால் மாத்திரை போல் கிடைக்கும். பின் இதனை சலித்து தேங்காய் எண்ணெயில் கலந்து தடவி வர முடி வளர்ச்சி பெறும்.

* நெல்லிக்கனிகளைதண்ணீரில் போட்டு ஒரு இரவு ஊற வைத்து மறுநாள் அந்த நீரில் எலுமிச்சம் பழச்சாறை பிழிந்து பின் தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் சிறிது நாட்களிலேயே செம்பட்டை முடி கருப்பாக மாறும்.

* காரட் தினசரி சமையலில் சேர்த்துக் கொள்வதுடன் 2 டம்ளர் மோருடன் 2 காரட்டையும் போட்டு மைய அரைத்துக் குடித்து வர உடல் இளைக்க ஆரம்பித்து விடும். போதும் என்ற நிலை வந்தவுடன் சாப்பிடுவதை நிறுத்திவிடவும

* 50 மிலி இஞ்சிசாற்றை எடுத்து அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும். கொதி வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி தேன் 50 மிலி ஊற்றி ஆற வைத்து எடுத்துக் கொண்டு தினசரி காலை மாலை என 2 வேளை உணவுக்குப் பின் சாப்பிட்டு வர பருத்த வயறு குறையும்.

*நெல்லிக்காயை எலுமிச்சம்பழச் சாற்றை விட்டு மைய அரைத்து தலையில் தேய்த்து உலர வைத்து பின்னர் குளித்து வர தலை முடி உதிர்வது நின்று விடும்.


*மருதாணி இலையை அரைத்து உடல் மீது தேய்த்து வந்தால் உடல் பளபளப்பாகி கருப்பு நிறம் மாறும்.

* எலுமிச்சை சாறு பிழிந்து ஆவியை முகத்தில் 3 நாட்கள் பிடித்து வர முகம் பளபளப்பாகும்.

* கருவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணையில் கலந்து காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் முடி அடர்த்தியாகவும் கருப்பாகவும் இருக்கும்.

* காரட், எலுமிச்சம் பழச்சாறு இவற்றை தேங்காய் எண்ணையில் கலந்து காய்ச்சி தலையில் தேய்த்து வர முடி நன்றாக வளரும்.

* மருதாணி இலையை அரைத்து தலைக்கு குளித்து வந்தால் பேன், பொடுகு மறையும். நரையும் குறையும்.

* தேங்காய் எண்ணையில் மஞ்சள் தூளை நன்கு குழைத்து கண்களைச் சுற்றிலும் பூசி 10 நிமிடங்களுக்குப் பிறகு குளித்து வர கண்களைச் சுற்றிலும் காணப்படும் கருவளையம் மாறி விடும்.

* கருமையடைந்த முகம் பொலிவு பெற பாதம் பருப்பை பாலில் அரைத்து இரவில் முகத்தில் தொடர்ந்து பூசி வர பொலிவு பெறும்.