Tuesday, April 23, 2013

பெண்களுக்கான மருத்துவக் குறிப்புகள்


  • கருப்பைக் கோளாறுகள் உள்ளவர்கள் நெல்லிக்கனியை தினசரி சிறிது சேர்த்து வர கருப்பை நோய் குணமாவதொடு தாய்க்கும் வயிற்றில் உள்ள குழந்தைக்கும் சிறந்த டானிக்காக பயன்படுகிறது.

  • மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்று வலி தீர எலுமிச்சம் பழச்சாறு சாப்பிடவும்.

  • தாய்மார்கள் அன்றாடம் உணவு பதார்த்ததுடன் பப்பாளிக்கையை சமைத்து சாப்பிட்டு வர தாய்ப்பால் அதிகம் சுரக்கும்.

  • சில பெண்களுக்கு மாதவிடாய் தள்ளிக்கொண்டே போகும். அத்தகையப் பெண்கள் பப்பாளி பழுக்க ஆரம்பித்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர உடனே பலன் கிடைக்கும்.

  • தினமும் மூன்று வேளை பசும்பாலில் தேனும் நான்கு பூண்டுப் பற்களும் சேர்த்துப் பருகினால் தாய்ப்பால் நிறைய சுரக்கும். இதனால் குழந்தைகளுக்கு அஜீரணம், ஜலதோஷம் பேன்றவை வராமல் தடுக்கப்படும்.

  • கேழ்வரகு மாவுடன் எள்ளும், வெல்லமும் கலந்து அரைத்து அடை செய்து சாப்பிட்டால் தாய்ப்பால் சுரக்காத பெண்களுக்கு பால் சுரக்கும். தொடர்ந்து சாப்பிட உடல் ஆரோக்யமாக இருக்கும்.

  • கர்ப்பிணி பெண்கள் அடிக்கடி இளநீர், தர்ப்பூசணிப் பழம் ஆகியவை சாப்பிட்டால் குழந்தை வெளுப்பாகப் பிறக்கும். அழகாகவும் இருக்கும்.