Sunday, February 4, 2024

செம்பருத்திப்பூ டீ/தேநீர்/தீநீர்/Hibiscus tea

செம்பருத்திப்பூ தேநீர் அடிக்கடி உட்கொண்டுவந்தால், இதயம் பலப்படும். பலவகை, பலநிற செம்பருத்தி பூக்கள் இன்று கிடைக்கிறது. ஆனால் ஒற்றை அடுக்கு சிகப்பு நிற பூக்கள் மட்டுமே இந்தத் தேநீர்/தீநீர் தயாரிக்க பயன்படுத்த வேண்டும். செம்பருத்தி பூச்செடி அநேக வீடுகளில் வளர்க்கப்படும் ஒரு அழகு பூச்செடி. இச்செடி அழகு மட்டும் அல்ல ஆரோக்கியத்தையும் தரக்கூடியது. 



தேவையான பொருள்கள்

செம்பருத்திப் பூ - 4 

பனங்கற்கண்டு - இனிப்புக்கேற்றவாறு

தண்ணீர் - 1 கப்

செய்முறை

செம்பருத்திப் பூக்களை கழுவிக்கொள்ளவும். கழுவிய பூக்களை ஒவ்வொன்றாக எடுத்து அதனுடைய இதழ்களை மட்டும் தனியாக பிரித்து எடுத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் செம்பருத்திப்பூ இதழ்களைச் சேர்த்து சூடாக்கவும். தண்ணீர் கொதித்த பின் பனங்கற்கண்டு சேர்த்து கிளறவும். செம்பருத்திப்பூ இதழ்களின் நிறம் மாறும் வரை அடுப்பில் வைத்திருந்து பின் இறக்கி வடிகட்டவும். செம்பருத்திப்பூ டீ தயார்.

Consuming Hibiscus tea regularly can strengthen the heart. Many varieties and colors of hibiscus flowers are available today. But only single layer red flowers should be used to make this tea/tea. 

Ingredients

Hibiscus Flower - 4

Palm candy - as per taste

Water - 1 cup

Recipe

Wash the hibiscus flowers. Take the washed flowers one by one and separate only the petals. Pour water in a pan and add hibiscus petals and heat it. After the water boils, stir in the palm candy. Keep it in the stove until the hibiscus petals change color and then remove and strain. Hibiscus tea is ready to serve.

No comments: