இருமல் இருக்கும் போது இந்த தீநீர் குடித்து வந்தால் எளிதில் குணமாகும். இந்தத் தீநீர் செய்வது மிக எளிது.துளசியில் கருந்துளசி, வெள்ளைத்துளசி என்று 2 வகைகள் உள்ளன. இருவகை துளசியும் இந்த தீநீர் தயாரிக்க பயன்படுத்தலாம். துளசி இலைகளைப் பறித்து நிழலில் உலர்த்தி டப்பாவில் போட்டு வைத்துக்கொண்டால் தேவைப்படும் போது எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
தேவையான பொருள்கள்
துளசி இலைகள் -10
ஏலக்காய் - 2
செய்முறை
துளசி இலைகளை நன்றாக கழுவி எடுத்துக்கொள்ளவும். கழுவிய இலைகளை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு அதனுடன் 1 கப் தண்ணீர் சேர்த்து பின் ஏலக்காயையும் தட்டிச் சேர்த்து அடுப்பில் மிதமான தீயில் வைக்கவும். தண்ணீர் கொதித்த பின் 3-4 நிமிடங்கள் வைத்திருந்து பின் வடிகட்டி குடிக்கவும்.