Showing posts with label cooking tips in tamil. Show all posts
Showing posts with label cooking tips in tamil. Show all posts

Saturday, April 4, 2009

சமையல் குறிப்புகள் :

* பண்டிகை காலங்களில் பலகாரங்கள் சுட்ட எண்ணெய் கசடுடன் மீதமாகும். மூன்று நான்கு உருளைக் கிழங்குத் துண்டுகளை அதில் பொரித்தெடுத்தால் எண்ணெய் சுத்தமாகிவிடும்.

* முருங்கைக் காய்கள் முற்றி விட்டால் தூக்கி எறிந்து விட வேண்டாம். அவற்றின் விதைகளின் உள்ளே இருக்கும் பருப்புகளை வறுத்து உண்டால் நிலக்கடலையைப் போன்ற ருசி இருப்பதுடன் உடலுக்குப் போஷாக்கையும் வலுவையும் கொடுக்கும்.

* கொத்தமல்லிச் சட்னி மீந்து விட்டால் மோரில் சட்னியைக் கரைத்து விடுங்கள். மசாலா மோர் தயார்.

* மீந்து போன உருளை, வாழை சிப்ஸ்களை வீணாக்காமல் மிக்ஸியில் கரகரப்பாகப் பொடித்து பொரியலுக்குத் தூவினால் பொரியல் கூடுதல் ருசியுடன் இருக்கும்.

* ஜாம் செய்யும் போது அதில் ஆப்பிள் சில துண்டுகள் நறுக்கிப் போடுங்கள். ஏனெனில் ஆப்பிளிலுள்ள பெக்டின் என்னும் பொருள் ஜாம் தயார் ஆவதற்கு மிகவும் உதவுகிறது.

* உப்பு ஜாடியில் இரண்டு பச்சை மிளகாயைப் போட்டு வைத்தால் உப்பு நீர்த்துப் போகாது.

* வெண்டைக்காயின் காம்புகளையும் தலைப்பாகத்தையும் நறுக்கி விட்டு வைத்தால் மறுநாள் சமைப்பதற்குள் முற்றிப் போகாமல் இருக்கும்.

* நான்ஸ்டிக் தோசைக்கல்லை உபயோகித்தவுடன் சூடாக இருக்கும் போதே அதை ஒரு துணியால் அழுத்தித் துடைக்க வேண்டும். ஆறின பிறது லிக்விட் சோப்பு போட்டு கழுவி விட்டால் கல்லின் ஓரம் தடிமனாக ஆகாது.

* இட்லிக்கு மாவு அரைக்கும் போது உளுந்து அதிகமாகிப் போய் இட்லி மிகவும் அமுங்கி மெல்லியதாக இருந்தால் சிறிதளவு ரவையை தண்ணீரில் பிசிறி ஊற வைத்து மாவுடன் கலந்து இட்லி வார்த்தால் பந்து பந்தாக மெதுவாக இருக்கும்.

* முருங்கை இலையை உருவியபின் எஞ்சி நிற்கும் ஈக்குகளை வீணாக்க வேண்டாம். அவைகளை நறுக்கி மிளகு ரசத்தில் போட்டுக் கொதிக்க வைத்து உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் கை, கால், உடல் அசதிகள் நிற்கும். உடலில் பலமும் ஏறும்.

   

Tuesday, July 22, 2008

உபயோகமான சில சமையல் குறிப்புகள்

சில சமையல் குறிப்புகள் நமக்கு மிகவும் உபயோகமானதாக இருக்கும். அந்த சமையல் குறிப்புகளை எல்லாம் தொகுத்து இங்கு வழங்கியுள்ளேன். இவை படித்ததில் பிடித்தது. நானும் இனிமேல் தான் உபயோகப்படுத்திப் பார்க்க வேண்டும்.
* புதிதாய் அரைத்த தோசை மாவில் உடனே தோசை ஊற்றினால் தோசை சுவையாக இருக்காது. அந்த மாவில் புளித்த தயிர் ஊற்றி 10 நிமிடங்கள் கழித்து ஊற்றினால் தோசை மொறு மொறுவென்று இருக்கும்.

* கட்லட் செய்யும் போது பிரட்தூள் இல்லாவிட்டால் அதற்கு பதில் ரவையை நெய்யில் வறுத்து விட்டு உபயோகிக்கலாம்.

* தயிர் சாதத்தில் கடுகுக்கு பதில் ஓமம் சேர்த்து தாளித்தால் மணமாகவும், சுவையாகவும் இருக்கும். இது அஜீரணத்திற்கு நல்லது.

* சேப்பங்கிழங்கு, கத்திரிக்காய் இவற்றை வதக்கும் போது கொஞ்சம் கடலை மாவைத் தூவி வதக்குங்கள். கொழகொழவென்று சேராமல் சிவந்து முறுமுறுவென்று ஆகும். எண்ணெயும் அதிகம் வேண்டாம்.

* பருப்பு வேக வைக்கும் போது சிறிதளவு எண்ணெயையோ அல்லது இரண்டு பல் பூண்டையோ போட்டால் பருப்பு வெகுவிரைவில் வெந்து விடும்.

* பச்சை பட்டாணியை வேக வைக்கும் போது ஒரு தேக்கரண்டி சர்க்கரையும் சேருங்கள். ஓன்று போல் பட்டாணி வேகும். அதன் நிறமும் மங்காது.

* பாலை உறைக்கு ஊற்றும் போது அதில் கொஞ்சம் அரிசிக்கஞ்சியை கலந்தால் பெயர்த்து எடுக்கும்படி கெட்டித் தயிராக மாறிவிடும். ( இப்போ எங்கேங்க அரிசிக்கஞ்சி?????? எல்லாமே ரைஸ் குக்கர் மயம் தானே?????? )

* குழம்பு தண்ணியாக இருந்தால் அதில் ஒரு டீஸ்பூன் சோளமாவை, கால் டம்ளர் தண்ணீரில் கரைத்து ஊற்றி கொதிக்க விடவும். குழம்பு கெட்டியாகி விடும்.

*உளுந்து சாதம் (BlackGramDhalRice) செய்யும் போது குக்கரில் செய்வதை விட 
மண்பானையில்செய்தால் மிகவும் ருசியாகவும் நன்கு குழைந்து 
வெண்பொங்கல் பதத்தில்நன்றாக வரும்.உளுந்து சாதம் செய்முறை இங்கே பார்க்கவும்.