
முகத்தைப் பள பளவென வைத்திருக்க சில வழிகள்:
1. ஒரு தக்காளியின் சாறுடன் கால் டீஸ்பூன் ரவையை கலந்து கொள்ளவும். இதை நன்றாக முகத்தில் தேய்த்து கழுவவும். தொடர்ந்து இதைச் செய்து வந்தால் முகம் சூரியனாக பிரகாசிக்கும்.
2. ஒரு தக்காளியை எடுத்து கூழாக்கிக் கொள்ளவும். இதனுடன் அரை டீஸ்பூன் தயிரைக் கலந்து கொள்ளவும். இதை முகத்துக்குப் பூசி 5 நிமிடம் கழித்து கழுவவும். முகம் மிருதுவாகி தங்கம் போல் தக தகவென ஜொலிக்கும்.
3. ஒரு வெள்ளரித்துண்டு, அரை தக்காளி இரண்டையும் அரைத்துக் கொள்ளவும். இமைகளின் மேல் இந்த கலவையைப் பூசி 2 நிமிடம் கழித்துக் கழுவவும். ஓரிரு வாரங்கள் இதைச் செய்து வந்தால் கண்ணுக்கு கீழ் உள்ள கருவளையம் காணாமல் போவதுடன் கண்களும் பளிச்சென்று இருக்கும்.
6 comments:
நல்ல குறிப்பு !!!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!!!
very useful
Thanks Sivaprakasam!!!!!!!
Post a Comment