Showing posts with label ஆரோக்கியம். Show all posts
Showing posts with label ஆரோக்கியம். Show all posts

Wednesday, August 23, 2023

சுக்கு மல்லி காபி/Dried Ginger and Coriander Coffee

சளித்தொல்லை, தொண்டைவலி, இருமல் இருக்கும்பொழுது இந்த சுக்கு மல்லி காபி தொண்டைக்கு இதமாகவும் அதே நேரத்தில் ஒரு நிவாரணியாகவும் திகழ்கிறது. துளசி இலைகள் சேர்ப்பதால் இருமலை குறைக்கும் ஒரு வீட்டு மருந்தாகவும் இருக்கும். 

தேவையான பொருட்கள்

சுக்கு துண்டு - 1 இஞ்ச் அளவு

முழுமல்லி - 1/2 டீஸ்பூன்

முழுமிளகு - 1/4 டீஸ்பூன்

முழுசீரகம் - 1/4 டீஸ்பூன்

துளசி இலை - 10 எண்ணம்

கருப்புக்கட்டி - ஒரு எலுமிச்சம்பழ அளவு

தண்ணீர் - 2 கப்

செய்முறை

சுக்கு,மல்லி,மிளகு,சீரகம் போன்றவற்றை தனித்தனியே இடிகல்லில் போட்டு கொரகொரப்பாக இடித்துக்கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் எடுத்து அதை சூடாக்கவும். பின் அதில் கருப்புக்கட்டி சேர்க்கவும். 

ஒரு கொதிவந்ததும் அதில் இடித்துவைத்துள்ள சுக்கு,மல்லி,மிளகு,சீரகத்தை சேர்க்கவும். பின் அதனுடன் துளசி இலைகளை சேர்த்து ஒரு கரண்டி வைத்து கலக்கவும். கரண்டி வைத்து கலக்கும் போது கருப்புக்கட்டி கரையாமல் இருந்தால் கூட கரைந்துவிடும்.

3 முதல் 4 நிமிடங்கள் கொதிக்கவிட்டு அடுப்பிலிருந்து இறக்கவும். 3 நிமிடங்கள் கழித்து சுக்கு மல்லி காபி குடிப்பதற்கு தயாராக இருக்கும். 3 நிமிடங்கள் காத்திருப்பதால் கருப்புக்கட்டியில் உள்ள சிறு அழுக்குகள் அடியில் தங்கிவிடும்.சல்லடை வைத்து அரித்து குடிக்கவும்.



Wednesday, August 13, 2008

தித்திக்கும் தேன்

தேனை விரும்பாதோர் இல்லை. பொதுவாக இனிப்பு உடலுக்கு தீங்கானது என்பதை நாம் அறிவோம். ஆனால் தேன் இனிப்பு சுவை உடையதாக தெரிந்தாலும் உண்மையில் அது காரத் தன்மை கொண்டது. தேனில் 80% காரம் மற்றும் 20% அமிலம் கலந்து உள்ளது. தேனை அருந்தியவுடனே அது இரத்தத்தில் கலக்கும். விளையாட்டுத் துறை அன்பர்கள் இழந்த சக்திகளை உடனடியாக மீட்டுத்தரும் வல்லமை தேனில் உள்ளது. கழிவே இல்லாத உணவு தேன்.

தேன் பல்வேறு மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளது. கண் ஒளியைக் கூட்டும் சக்தி தேனில் உள்ளது. உடல் பருமன், தொப்பை உடையவர்கள் சுடு தண்ணீரில் எலுமிச்சை பழச் சாறுடன் தேன் கலந்து காலை வேளையில் அருந்தி வர நல்ல பலன் கிடைக்கும். நோஞ்சான் அன்பர்கள் தேனை தினமும் இரவு பாலுடன் அல்லது நீரில் கலந்து அருந்தி வர உடல் எடை பெறுவர். இதயம், ஈரல் போன்றவை பலம் பெறும். நோயாளிகள், சிறுவர்களுக்கு ஏற்ற உணவு இந்த தேன்.

தேனை எவ்வாறு சாப்பிட வேண்டும், எவற்றுடன் தேன் சேரக்கூடாது என்பதை இனி பார்க்கலாம்.
* தேனை மட்டும் தனியாக உறிஞ்சி சாப்பிடக்கூடாது.
* தண்ணீரில் அல்லது பழச்சாறுகளில் கலந்து தான் சாபிடவேண்டும்.
* தேன் சூடானால் சத்துக்களை இழந்து விடும். எனவே தேனை சூடாக்கக்கூடாது.
* தேனும் நெய்யும் கலக்கக்கூடாது. கலந்தால் நஞ்சாகும்.
* தேனும் முட்டையும் கலக்கக்கூடாது.
* தேனும் சீனியும் கலக்கக்கூடாது.

Thursday, July 3, 2008

அத்திப்பழத்தின் சிறப்பு :


இன்றைய இள வயதினரிடையே காணப்படும் மிகப் பரவலான நோய் ரத்தசோகை எனப்படும் ரத்தக்குறைபாடு. இதற்கு காரணம் தவறான உணவு பழக்க வழக்கங்களே. உப்பு, புளிப்பு, காரம் மிகுந்த உணவுகளும் அளவிற்கு அதிகமான மது பழக்கமும் ரத்தசோகையை ஏற்படுத்தும். இந்நோய் ஏற்படாமல் இருக்கவும் , இந்நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அத்திப்பழம் சிறந்த மருந்தாகிறது. உலர்ந்த அத்திப்பழம் அதிக மருத்துவ குணம் வாய்ந்தது. ரத்தத்தை சுத்தப்படுத்தி அதிகரிக்கச் செய்கிறது.

அத்திபழத்தில் இரும்புச்சத்து ஒரு கிராம் அளவு உள்ளது. கால்சியம், மற்றும் பாஸ்பரஸ் தாதுக்களும் நிறைந்து உள்ளதால், எலும்பு வளர்ச்சிக்கும், பலத்திற்கும் உதவுகிறது. இளம் பெண்கள் முதற்கொண்டு மாதவிடாய் காலம் முடிவுறும் நிலையில் உள்ள பெண்கள் வரை தினம் அத்திப்பழத்தை இரவு நீரில் ஊற வைத்து காலை எழுந்தவுடன் நீரை குடித்து பழத்தை மென்று சாப்பிட மாதவிடாய் சம்பந்தப்பட்ட கோளாறுகள் நீங்கும். கருத்தரிப்பில் உண்டாகும் பிரச்சினைகள் அகலும். கர்ப்ப காலங்களில் பல பெண்களுக்கு மலச்சிக்கல் ஏற்படும். அவர்கள் தினம் ஊற வைத்த அத்திபழம் சாப்பிடுவதால் மலச்சிக்கல் நீங்குவதுடன் உடலுக்கு வேண்டிய தாதுவையும் எளிதாக பெறமுடியும். சரிவர பசி எடுக்காத குழந்தைகளுக்கு இதை கொடுக்க அவர்கள் பசி எடுத்து உண்பார்கள். சுறுசுறுப்பாக இயங்குவார்கள். நாட்பட்ட வறட்டு இருமல் உள்ள குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.